Thursday, March 12, 2009

"தமிழ் மணம்" தரும் தமிழ் இணையப்பயிலரங்கம் -நேரடி ஒளிபரப்பு

எதிர் வரும் சனிக்கிழமை (14-3-2009) திருச்செங்கோட்டில்
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் "தமிழ் மணமும்" இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கு ஒன்றை நடத்த உள்ளது.

இந்த நிகழ்வை சங்கமம் இணைய இதழ் http://sangamamlive.in/
நேரடி ஒளிபரப்புச் செய்கிறது. இதை உலக வாழ் தமிழர்கள்
கண்டுகளிக்க சங்கமம் ஆசிரியர் திரு.விஜயகுமார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். வலைப்பதிவர்கள்
மற்றும் வலைப்பதிவில் ஆர்வமுள்ளோர் கண்டு பயன்பெறலாம்.

நிகழ்வு குறித்த விபரம்:

தமிழ் இணையப்பயிலரங்கம் - 14.03.2009
நிகழ்ச்சி நிரல்
காலை 10.00 - தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்பு - திரு.மா.கார்த்திகேயன்
தலைமையுரை - முனைவர் நா.கண்ணன்
அறிமுகவுரை - முனைவர் இரா.சந்திரசேகரன்
தொடக்கவுரை - புலவர் செ.இராசு
விருந்தினர்களைச் சிறப்பித்தல்
முதல் அமர்வு முற்பகல்
முனைவர் மு.இளங்கோவன் தலைப்பு - தமிழும் இணையமும்
முனைவர் இரா.குணசீலன் - வலைப்பூ உருவாக்கமும் பயன்பாடுகளும்
உணவு இடைவேளை
முனைவர் மு.இளங்கோவன் - இணைய இதழ்கள்
தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகம், விக்கி பயனாளிகள்
திரு.ப.சரவணன் - இணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு
முனைவர் த.கண்ணன் - தமிழ் வலைப்பதிவுகள்
திரு.செல்வமுரளி - இணையத்தளப் பாதுகாப்பு
நிறைவு விழா - நாட்டுப்பண்